sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு வசதிகள் இல்லை: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்

/

பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு வசதிகள் இல்லை: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்

பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு வசதிகள் இல்லை: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்

பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு வசதிகள் இல்லை: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்


ADDED : டிச 27, 2024 05:31 AM

Google News

ADDED : டிச 27, 2024 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தின் பல்வேறு வழித்தடங்களில் பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூச விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். கார்த்திகை மாதம் முதல் மாலை அணிந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை மார்கழி மாதம் துவங்கியதிலிருந்து அதிகரித்தது.

சில நாட்களாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தகுந்த வசதிகள் வரும் வழியில் இல்லாததால் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாதயாத்திரை பக்தர்களுக்கென அமைக்கப்பட்ட தனிப்பாதைகள் முறையாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி உள்ளது. அப்பாதையில் திறந்தவெளி கழிப்பிடமாக சிலர் பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடாக உள்ளது.

பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பாதையை தவிர்த்து வாகனங்கள் வரும் ரோட்டில் பக்தர்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. ரோடுகளில் சில இடங்கள் பெயர்ந்து கற்களோடு இருப்பதால் பாதயாத்திரை வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

இதனால் மாலை,இரவு நேரங்களில் பயணிப்பதில் இடையூறு ஏற்படுகிறது. ஒளிரும் பட்டைகள், குச்சிகளை அணிந்து வர பக்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இரவு நேர பாதயாத்திரை தவிர்க்கவும்,பாதுகாப்பான இடங்களில் தங்கவும் தகுந்த வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும்.






      Dinamalar
      Follow us