/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் இல்லை மழை மானி மழைப்பதிவை கணக்கிடுவதில் குழப்பம்
/
ஒட்டன்சத்திரத்தில் இல்லை மழை மானி மழைப்பதிவை கணக்கிடுவதில் குழப்பம்
ஒட்டன்சத்திரத்தில் இல்லை மழை மானி மழைப்பதிவை கணக்கிடுவதில் குழப்பம்
ஒட்டன்சத்திரத்தில் இல்லை மழை மானி மழைப்பதிவை கணக்கிடுவதில் குழப்பம்
ADDED : நவ 19, 2024 06:22 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் மழைமானி இல்லாததால் மழைப்பதிவை துல்லியமாக கணக்கிடுவதில் குழப்பம் ஏற்படுகிறது.
ஒட்டன்சத்திரம் தாலுகா விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ளதால் மழையை எதிர்பார்த்து இங்கு வேளாண் தொழில் நடைபெறுகிறது.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள சத்திரப்பட்டியில் மழை மானி உள்ளது.
அதேபோல் ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியான பரப்பலாறு அணை பகுதியிலும் மழை மானி உள்ளது.
ஆனால் ஒட்டன்சத்திரம் தாலுகாவில் மழைமானி இல்லை . முன்பு இருந்த நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதியில் பதிவாகும் மழையின் அளவு துல்லியமாக கணக்கிடப்பட்டு தெரியப்படுத்தப்பட்டது.
தற்போது இங்கு இல்லாததால் சத்திரப்பட்டி பகுதியில் பதிவாகும் மழையே கணக்கிடப்பட்டு வருகிறது.
பல நேரங்களில் ஒட்டன்சத்திரத்தில் மழை பெய்யாமல் இருந்தபோதிலும் சத்திரப்பட்டி பகுதியில் அதிகமாக மழை பெய்கிறது.
ஒட்டன்சத்திரத்தில் கனமழை பெய்யும் நேரங்களில் சத்திரப்பட்டி பகுதியில் குறைவான மழை பெய்கிறது.
இதனால் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்யும் மழையின் துல்லிய மதிப்பை கணக்கிட முடியவில்லை.
விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஒட்டன்சத்திரம் பகுதியில் மழை மானி அமைப்பது அவசியம் ஆகும்.