sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் நாளை திருக்கார்த்திகை தீபத்திருவிழா துவக்கம்

/

பழநியில் நாளை திருக்கார்த்திகை தீபத்திருவிழா துவக்கம்

பழநியில் நாளை திருக்கார்த்திகை தீபத்திருவிழா துவக்கம்

பழநியில் நாளை திருக்கார்த்திகை தீபத்திருவிழா துவக்கம்


ADDED : டிச 06, 2024 06:23 AM

Google News

ADDED : டிச 06, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா நாளை (டிச., 7) காப்பு கட்டுதலுடன் துவங்கி டிச., 13 வரை நடக்கிறது.

நாளை மாலை 5:30 மணிக்கு சாயராட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் துவங்கும் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை தொடர்ந்து டிச.,12 மாலை 5:30 மணிக்கு பூஜை சாயரட்சை பூஜையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு சண்முகார்ச்சனை நடக்கிறது. விழா நாட்களில் சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, சின்ன குமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை தீபாராதனை நடக்கிறது.

டிச. 13 அன்று பெரிய கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜை, மதியம் 2:00 மணிக்கு சண்முக அர்ச்சனை, சண்முகர் தீபாராதனை, மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை, 4:45 மணிக்கு சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளல்,யாகசாலை தீபாராதனை நடக்கிறது.

தொடர்ந்து கோயிலில் நான்கு மூலைகளில் தீபம் ஏற்ற மாலை 6:00 மணிக்கு திருகார்த்திகை தீபம், சொக்கப்பானை ஏற்றப்படுகிறது.

இதையொட்டி அன்று தங்கரத புறப்பாடு நடைபெறாது. இதன் பின் திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பானை ஏற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us