/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம்
/
பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம்
பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம்
பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம்
ADDED : டிச 04, 2025 12:34 AM

பழநி: பழநி முருகன் கோயில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் சொக்கப்பனை, மகாதீபம் ஏற்றப்பட்டது.
பழநி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவ.,27ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழா நாட்களில் சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, சின்ன குமாரசுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை தீபாராதனை நடந்தது. டிச.,2 மாலை சாயரட்சை பூஜையில் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதை தொடர்ந்து திருக்கார்த்திகை தீபத் திருநாளான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜை ,மதியம் 2:00 மணிக்கு சண்முக அர்ச்சனை, சண்முகர் தீபாராதனை, மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை, 4:45 மணிக்கு சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள யாகசாலை தீபாராதனை நடந்தது.
பின் முருகன் கோயில் நான்கு மூலைகளில் தீபம் ஏற்ற மாலை 6:02 மணிக்கு திருகார்த்திகை தீபம், பனை ஓலைகளால் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

