UPDATED : ஜூலை 07, 2026 08:39 PM
ADDED : ஜூலை 07, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
செந்துறை:செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் குறள் நெறிக்கூடம் சார்பில் திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தலைமையாசிரியை தேவமனோகரி தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் ராஜாக்கிளி, வழிகாட்டு ஆசிரியர் ஷாஜகான் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் விக்னேஷ்வரன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கனடா நாட்டு தொலைக்காட்சி நடத்திய இயல், இசை, நாடக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள் விஸ்வதிகா, தர்ஷனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
