ADDED : ஏப் 24, 2025 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசருக்கு சித்திரை சதய நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதன் பின் திருநாவுக்கரசர் ரத வீதியில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டார் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
இதுபோல் பாலசமுத்திரம், பாலாறு- பொருந்தலாறு அணைப்பகுதியில் உள்ள அமுதீஸ்வரர் கோயிலிலும் திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடைபெற்றது.