ADDED : ஜன 17, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி பெரிய கலையம்புத்துாரில் வள்ளுவர் வீதியில் திருவள்ளுவர் கோயில் உள்ளது. 56 ஆண்டுகளாக இக்கோயிலில் திருவள்ளுவர் தினத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
கோயிலில் தினமும் குழந்தைகள் திருக்குறள் படித்து வருகின்றனர்.
திருவள்ளுவர் தினத்தன்று திருவள்ளுவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாநில திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்ற சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.