sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

உளுந்து வடையில் பூரான் சாப்பிட்டோருக்கு மயக்கம்

/

உளுந்து வடையில் பூரான் சாப்பிட்டோருக்கு மயக்கம்

உளுந்து வடையில் பூரான் சாப்பிட்டோருக்கு மயக்கம்

உளுந்து வடையில் பூரான் சாப்பிட்டோருக்கு மயக்கம்


ADDED : அக் 17, 2024 02:41 AM

Google News

ADDED : அக் 17, 2024 02:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல், என்.ஜி.ஓ., காலனி பெரியார் காலனியை சேர்ந்தவர் பியூலா, 28. இவர் நேற்று காலை திருச்சி ரோடு உழவர் சந்தை பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் உளுந்து வடைகள் வாங்கினார். தொட்டு சாப்பிட சட்னியும் வாங்கி, அவற்றை வீட்டிற்கு எடுத்து வந்து மகன் சஞ்சீவ், 4, தோழி அஸ்வதி, 25, ஆகியோருடன் சாப்பிட்டார்.

அப்போது ஒரு வடையின் உள்பகுதியில் இறந்த நிலையில் பூரான் இருந்தது. அந்த வடையை சாப்பிடாமல் அப்படியே வைத்து விட்டனர். வடையில் பூரான் இருந்ததை பார்த்ததும், வடை சாப்பிட்ட மூவருக்கும் சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

அவர்கள் உடனே, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு, சிகிச்சைக்கு பின், சிறிது நேரத்தில் மூன்று பேரும் வீடு திரும்பினர். தகவலறிந்த, உணவு பாதுகாப்பு மாவட்ட அலுவலர் கலைவாணி மற்றும் அலுவலர்கள் அந்த டீ கடையில் ஆய்வு செய்தனர்.

அங்கு சுத்தமில்லாத முறையில், உணவு பண்டங்கள் தயாரிக்கப்படுவதை அறிந்து, 3,000 ரூபாய் அபராதம் விதித்து, கடைக்கு சீல் வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us