sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விவசாயியை காரில் கடத்தி பணம் பறிப்பு: 3 பேர் கைது

/

விவசாயியை காரில் கடத்தி பணம் பறிப்பு: 3 பேர் கைது

விவசாயியை காரில் கடத்தி பணம் பறிப்பு: 3 பேர் கைது

விவசாயியை காரில் கடத்தி பணம் பறிப்பு: 3 பேர் கைது


ADDED : ஜூன் 14, 2025 06:13 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்த விவசாயியை காரில் கடத்தி பணம் பறித்த 3 பேரை பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் பேகம்பூர் அமர்தீன் 30, ஜே.புதுக்கோட்டை சரவணகுமார் 31, 4 ஆண்டுகளாக தேவதானப்பட்டி அருகே வெட்டு சீட்டு விளையாடி வந்தனர். அய்யம்பாளையம் விவசாயி சிவா 47வுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டுள்ளது.

சீட்டு விளையாட்டில் சிவாவிடம் அமர்தீன் ரூ.90 ஆயிரம், சரவணக்குமார் ரூ.14 லட்சம் இழந்துள்ளனர். முறைகேடு செய்து சிவா தங்களை தோற்கடித்ததாக அமர்தீன், சரவணகுமாருக்கு தெரிய வந்தது. சிவாவிடம் பணத்தை கேட்டுள்ளனர். அவர் மறுத்தார்.

அவரை கடத்தி பணத்தை பெற முடிவு செய்தனர். மே 11ல் பட்டிவீரன்பட்டி டாஸ்மாக் கடை அருகே டூவீலரில் வந்த சிவாவை திண்டுக்கல் ஷாலிக்அபுராஜா லிப்ட் கேட்பது போல் வழிமறித்தார். அமர்தீன், சரவணகுமார் 31, கரூர் ரத்தினபுரிநகர் உதயகுமார் 35, கத்தியை காட்டி காரில் கடத்தி சென்றனர்.

திண்டுக்கல் குட்டியபட்டியில் ஆட்டு கொட்டிலில் சிவாவை கட்டி வைத்து நிர்வாணமாக்கி அடித்தனர். இதை அலைபேசியில் படம் பிடித்து அவரிடமிருந்த ரூ.40 ஆயிரம், கூகுள் பே மூலம் ரூ.15,000, ஏ.டி.எம்., கார்டு மூலம் ரூ.27 ஆயிரம், வங்கி காசோலை மூலம் ரூ.2 லட்சம் என ரூ. 2 லட்சத்து 82 ஆயிரத்தை பறித்துள்ளனர். வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி அதையும் வீடியோ எடுத்து கொண்டு அனுப்பினர்.

ஜூன் 8ல் சிவாவை தொடர்பு கொண்ட அமர்தீன், சரவணகுமார் ரூ.5 லட்சம் தரவேண்டும். இல்லாவிடில் கொலை செய்வோம் என மிரட்டினர். சிவா பட்டிவீரன்பட்டி போலீசில் புகார் செய்தார். அமர்தீன், சரவணகுமார், உதயகுமாரை போலீசார் கைது செய்தனர். ஷாலிக்அபுராஜாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us