/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் இன்று பரணி தீபம் நாளை திருக்கார்த்திகை தீபம்
/
பழநியில் இன்று பரணி தீபம் நாளை திருக்கார்த்திகை தீபம்
பழநியில் இன்று பரணி தீபம் நாளை திருக்கார்த்திகை தீபம்
பழநியில் இன்று பரணி தீபம் நாளை திருக்கார்த்திகை தீபம்
ADDED : டிச 12, 2024 02:14 AM
பழநி:பழநி முருகன் கோயிலில் இன்று பரணி தீபமும் நாளை (டிச. 13) திருக்கார்த்திகை தீபமும் ஏற்றப்பட உள்ளது.
பழநி முருகன் கோயிலில் டிச. 7ல் காப்பு கட்டுதலுடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியது.
தினமும் சண்முகார்ச்சனை , சின்ன குமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை நடைபெற்றது. இன்று மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு சண்முகார்ச்சனை நடைபெறும்.
திருக்கார்த்திகை தீபத் திருநாளான நாளை (டிச. 13 ) அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜை, மதியம் 2:00 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை, 6:00 மணிக்கு திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும். இதையொட்டி நாளை மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 வரை பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்தர்கள் யானை பாதை வழியாக மேலே சென்று படிப்பாதை வழியாக கீழே வரும் வகையில் ஒரு வழி பாதை அமல் படுத்தப்படுகிறது. நாளை இரவு தங்கரத புறப்பாடும் நடைபெறாது.