/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
/
'கொடை'யில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
ADDED : நவ 24, 2024 08:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கொடைக்கானலில் சில தினங்களாக மிதமான மழை பெய்தது. நேற்று காலை முதல் வெயில் பளிச்சிட்டு இதமான சூழல் நிலவியது.
மதியத்திற்கு பின் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. அவ்வப்போது நகரில் மேகக் கூட்டம் தரையிரங்கியது. இங்குள்ள சுற்றுலா மையங்களை பயணியர் ரசித்தனர். தொடர்ந்து ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள், ஏரியில் படகு சவாரி செய்தனர்.