/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : டிச 23, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : விடுமுறையால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். கொடைக்கானலில் தொடர் மழை பெய்த நிலையில் தற்போது மழை ஓய்ந்து ரம்யமான சீதோஷ்ண நிலை நீடிக்கிறது. தரை இறங்கிய மேகக்கூட்டம் என ரம்யமான சூழல் நிலவுகிறது.
சில்லிடும் காற்றால் கடுங்குளிர் நிலவியது. பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்களை பயணிகள் ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி, ஏரியில் படகு சவாரி செய்தனர்.