sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : ஜன 01, 2025 05:13 AM

Google News

ADDED : ஜன 01, 2025 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலில் ஆங்கில புத்தாண்டைவரவேற்கும் விதமாக விடுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கொடைக்கானலில் சாரலுடன் மிதமான மழை பெய்து வருகிறது.

நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் பெய்தது. இதிலும் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ்வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச் சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்தனர். ஏரியில் படகுசவாரி, ஏரிச்சலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். காலை முதலே நகரில் தரை இறங்கிய மேக கூட்டம், பனிமூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக சுற்றுலா பயணிகள் நகர் முழுதும் குதுாகலமாக காணப்பட்டனர்.மாலை 6:00 மணிக்கு பின் ஏரிச்சலையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் செய்ய போலீசார் தடைவிதித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us