/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜன 14, 2024 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலை, பொங்கல் தொடர் விடுமுறையை அடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிட்டனர்.
சில தினங்களாக கொடைக்கானலை சூழ்ந்த பனிமூட்டம், சாரல் மழை ஓய்ந்து பளிச்சிடும் வெயில் என ரம்யமான சூழல் நீடிக்கிறது. இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனசுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பகுதிகளை பார்த்து சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். அவ்வப்போது தரை இறங்கிய மேக கூட்டத்தையும் பார்த்து மகிழ்ந்தனர்.

