/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுற்றுலா பயணிகள் 'கொடை'யில் படகு சவாரி
/
சுற்றுலா பயணிகள் 'கொடை'யில் படகு சவாரி
ADDED : ஆக 11, 2025 02:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:விடுமுறை தினத்தையடுத்து கொடைக்கானலில் நேற்று சுற்றுலா பயணிகள் முகாமிட்டனர்.
இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச் சுற்றுலா தலங்கள், கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளை பார்த்து ரசித்தனர். ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி, ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
அவ்வப்போது தரையிறங்கிய மேகக் கூட்டம் என ரம்யமான சூழல் இருந்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. மதியம் 2 மணி நேரம் மிதமான மழை பெய்தது.