sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சர்வீஸ் ரோட்டில் தேங்கும் தண்ணீரால் போக்குவரத்துக்கு இடையூறு

/

சர்வீஸ் ரோட்டில் தேங்கும் தண்ணீரால் போக்குவரத்துக்கு இடையூறு

சர்வீஸ் ரோட்டில் தேங்கும் தண்ணீரால் போக்குவரத்துக்கு இடையூறு

சர்வீஸ் ரோட்டில் தேங்கும் தண்ணீரால் போக்குவரத்துக்கு இடையூறு


ADDED : மே 23, 2025 04:18 AM

Google News

ADDED : மே 23, 2025 04:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாய்ந்து கிடக்கும் அறிவிப்பு பலகை

வடமதுரை காணப்பாடி ரோட்டில் கலைமகள் துவக்கப் பள்ளி அருகில் இருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை சாய்ந்து கிடக்கிறது. இதை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- சவுந்தரராஜன், வடமதுரை.

..............---------பெயர் பலகையில் போஸ்டர்

திண்டுக்கல் அருகே சிறுமலை ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை பெயர் பலகையில் போஸ்டர் ஒட்டி மறைத்துள்ளனர் .இதனால் பெயர்கள் தெரியாமல் வாகன ஓட்டிக்கள் பாதிக்கின்றனர் . போஸ்டரை ஒட்டுவதை தடுக்க வேண்டும். ராமன் , சிறுமலை.............---------சேதமடைந்த சிலாப்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கட்டத்தில் ஜன்னல் சிலாப் பகுதி சேதமடைந்துள்ளது .இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருவோர் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இதை சீரமைக்க வேண்டும்.ஜெயக்குமார், திண்டுக்கல்.

..............----------சர்வீஸ் ரோட்டில் தண்ணீர் தேக்கம்

நத்தம் பாலப்பநாயக்கன்பட்டி பிரிவில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேங்காமல் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாட்ஷா, நத்தம்.

...........-----------

சேதமான குடிநீர் தொட்டி

குஜிலியம்பாறை அருகே ஆலம்பாடி ஊராட்சி மலவாடிநாயக்கனுார் குடிநீர் மேல்நிலைத் தொட்டி துாண் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கம்பிகளும் வெளியே தெரிகிறது .விபத்து ஏற்படும் முன் சரி செய்ய வேண்டும் வரதராஜ், குஜிலியம்பாறை.

..........-----------சாக்கடையில் கழிவுநீர்

அய்யலுார் -எரியோடு ரோடு அருகே சாக்கடையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது .தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது . பாதாசாரிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இதை சீரமைக்க வேண்டும். முத்துக்குமார், எரியோடு.

.............------------கண்மாய் அருகே குப்பை

வேடசந்துார் -கரூர் ரோடு ரங்கமலை கண்மாய் அருகே சாக்கு மூடைகளில் கழிவு பொருட்களை கொட்டி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் இந்தப் பகுதியே குப்பை காடாக காட்சி அளிக்கிறது . இல.சக்திவேல், வேடசந்துார்.

....------------






      Dinamalar
      Follow us