sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

புழுதி பறக்கும் ரோடால் போக்குவரத்து அவதி

/

புழுதி பறக்கும் ரோடால் போக்குவரத்து அவதி

புழுதி பறக்கும் ரோடால் போக்குவரத்து அவதி

புழுதி பறக்கும் ரோடால் போக்குவரத்து அவதி


ADDED : டிச 27, 2024 05:26 AM

Google News

ADDED : டிச 27, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆயக்குடி: பழநி ஆயக்குடி திண்டுக்கல் ரோடு சேதமாகி வாகனங்கள் செல்லும் போது ரோட்டில் உள்ள புழுதி பறந்து வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.

பழநி புது ஆயக்குடி பகுதியில் திண்டுக்கல் முக்கிய ரோடு உள்ளது. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் ரோடு சேதமடைந்தது. சில நாட்களுக்கு முன் ரோடு அமைக்க ஜல்லி, மண் கொட்டப்பட்டு தயார் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பின் பெய்த மழையின் காரணமாக அப்பகுதி மீண்டும் சேதமடைந்தது.

சில நாட்களாக வாகனங்கள் இப்பகுதியில் செல்லும்போது ரோட்டில் உள்ள மண் வாகனங்களின் வேகத்திற்கு காற்றில் பறந்து புழுதியை உருவாக்கியது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். வாகன ஓட்டிகள்,ரோட்டில் தடுமாறி விழுகின்றனர். மண் புழுதி வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து சிரமத்தை ஏற்படுத்துகிறது.

நேற்று இப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதித்து ரோட்டின் ஒரு பகுதி மட்டும் வாகனம் செல்லுமாறு அனுமதிக்கப்பட்டதால் போக்குவரத்து இடையூறு அதிகரித்தது. நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us