ADDED : மே 28, 2026 03:57 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநியில் உள்ள மாவட்ட அரசு அருங்காட்சியத்தில் கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரி, உயர் ஆய்வு மைய மாணவர்கள், பழநியாண்டவர் மகளிர் கல்லுாரி மாணவிகளுக்கு அருங்காட்சியத்தின் முக்கியத்துவம், நடுகற்களின் சிறப்பு, பழங்கால பொருட்களை பாதுகாப்பதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அருங்காட்சிய காப்பாட்சியர் சசிகலா, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
