ADDED : பிப் 03, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ் துறை இளந்தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் மாணவர்களின் கதை கவிதை சிறுகதை மேடைப்பேச்சு போன்ற செயல்பாடுகளின் தயக்கத்தை போக்க படைப்பிலக்கியம் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
தாளாளர் வேம்பணன், கல்லுாரி முதல்வர் தேன்மொழி தொடங்கி வைத்தனர்.
தமிழ் துறை பேராசிரியர் மலர்விழி வரவேற்றார். பேராசிரியர் கோகிலா மீனா அறிமுக உரை ஆற்றினார். கிணத்துக்கடவு அக் ஷயா கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் வசந்தகுமார் பேசினார். பேராசிரியர் ஜோதிமணி நன்றி கூறினார்.