sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கொடைக்கானல் ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

/

 கொடைக்கானல் ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

 கொடைக்கானல் ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

 கொடைக்கானல் ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : டிச 27, 2025 06:24 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானல் -- வத்தலக்குண்டு ரோட்டில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்ததால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர்.

பெருமாள்மலை அடுக்கம் ரோடு அருகே நேற்று மதியம் வனப்பகுதியிலிருந்து மரம் விழுந்தது.

தொடர் விடுமுறையால் ஏராளமான பயணிகள் மலை நகரில் முகாமிடுவதால் வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மரம் விழுந்தவுடன் நெடுஞ்சாலைத்துறையினர் தகவல் கிடைத்தும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மரத்தை அகற்ற தாமதம் ஏற்பட்டது.

ஒரு வழியாக 2 மணி நேர தாமதத்திற்கு பின் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுபோல் கொடைக்கானல் பூம்பாறை இடையே கிருஷ்ணன் கோயில் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் அரசு பஸ் மற்றும் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனங்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு 1மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் போக்குவரத்து சீரானது. மன்னவனூர் வரை நீடித்த நெரிசலால் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.






      Dinamalar
      Follow us