sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பெயர் பலகையை மறைத்துள்ள முட்களால் சிரமம்

/

பெயர் பலகையை மறைத்துள்ள முட்களால் சிரமம்

பெயர் பலகையை மறைத்துள்ள முட்களால் சிரமம்

பெயர் பலகையை மறைத்துள்ள முட்களால் சிரமம்


ADDED : நவ 01, 2024 05:22 AM

Google News

ADDED : நவ 01, 2024 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதர் மண்டிய நிழற்குடை : வடமதுரை அக்கரைப்பட்டி ரோட்டில் தாதநாயக்கன்பட்டி பிரிவில் உள்ள நிழற்கூடை பயன்படுத்த முடியாத அளவிற்கு புதர் மண்டி கிடக்கிறது. புதர்களை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் ,உள்ளாட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ---

--சங்கர், வடமதுரை.

பலகை தெரியாது தடுமாற்றம் : முத்தனம்பட்டி அருகே பழைய கன்னிவாடி செல்லும் ரோட்டில் உள்ள பெயர் பலகை முட்களால் மறைத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெயர் பலகை தெரியாமல் தடுமாறுகின்றனர் .முள் மரங்களை வெட்டி பெயர்களை தெரியும்படி வைக்க வேண்டும்.

-பழனிச்சாமி, முத்தனம்பட்டி.

சிரமத்தில் வாகன ஓட்டிகள் : நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து மின்வாரிய அலுவலகம் செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து அதிகமாக உள்ள பாதை என்பதால் ரோட்டை சீரமைக்க வேண்டும்.

-காளிதாஸ், நிலக்கோட்டை.

குப்பை குவியலால் அவதி : திண்டுக்கல் ராஜகாபட்டி ரோட்டில் குப்பை அள்ளாமல் குவிந்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.மழை நேரம் என்பதால் மழை நீருடன் குப்பை கலந்து துர்நாற்றமும் வீசுகிறது .குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துக்குமார், ராஜகாபட்டி.

சாய்ந்த மின்கம்பம் : கொடைரோடு அருகே அம்மாபட்டி - சங்கராபுரம் ரோடு விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது .எந்தநேரமும் சாய்ந்து விழும் நிலை உள்ளதால் மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

-தங்கவேலு, கொடரோடு.

குளம் போல் மழை நீர்

கொடைரோடு பஸ் ஸ்டாப்பில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீரில் செல்ல வழி இல்லாமல் பல நாட்களாக தேங்கியுள்ள இதை அகற்ற வடிகால் அமைக்க வேண்டும்.

-மருதபாண்டி, கொடைரோடு.

சேதமடைந்த கட்டடம் : நிலக்கோட்டை நீர்வளத்துறை அலுவலக கட்டடம் சேதமடைந்து விபத்து அபாயத்தில் உள்ளது. மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி கட்டடத்துக்குள் வருவதால் அலுவலர்கள் சிரமப்படுகின்றனர். இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொன்ராஜ் நிலக்கோட்டை.






      Dinamalar
      Follow us