/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
/
ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
ADDED : டிச 14, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் பழநி ,சத்திரப்பட்டி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் பார்சல் சர்வீஸ் லாரி ஒன்று வேகமாக சென்றது.
போலீசார் லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் 2 டன் அளவிலான ரேஷன் அரிசி இருந்தது. லாரியை ஓட்டி வந்த மதுரை வாடிப்பட்டி மேலக்கல் பகுதியை சேர்ந்த டிரைவர் மகேந்திரனை31, கைது செய்து அரிசியை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்தவர்கள் பிரேம் நசீர்49, அன்வர் பாஷா 54, இருவரையும் கைது செய்தனர்.

