ADDED : ஆக 19, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; திருப்பூர் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் மில் கண்காணிப்பாளர் பிரகாஷ் 35. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோயம்புத்துார் செல்வதற்கு பஸ்சுக்காக காத்திருந்தார்.
அருகே நின்றிருந்த இளைஞர் அலைபேசியை திருடிகொண்டு தப்பினார். பிடிக்க முயன்றபோது வேறொருவரிடம் அலைபேசியை கொடுத்துவிட்டு ஆளுக்கொரு திசையில் ஓடினர்.
இவர்களை வடக்கு போலீசார் பிடித்தனர். திருட்டில் ஈடுபட்டவர் பழநியை சேர்ந்த ஆதில் 24, ஒட்டன்சத்திரம் லக்கயன்கோட்டையை சேர்ந்த விஜய் 22, என்பது தெரிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

