/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இருவர் இறப்பு; கொலையா
/
ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இருவர் இறப்பு; கொலையா
ADDED : பிப் 23, 2024 06:00 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே இருவர் தனித்தனியாக இறந்து கிடந்தனர். இவர்கள் கொலை செய்யப்பட்டார்களா என போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் முன் பகுதியில் ஊர் பெயர் தெரியாதவர்கள்,வீட்டிலிருந்து வெளியேறியவர்கள் என ஏராளமானோர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள் கொடுக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு விட்ட அங்கேயே குடி இருக்கின்றனர். இங்கிருப்பவர்கள் சிலர் நோயால் பாதிக்கப்பட்டு அங்கேயே இறக்கும் நிலையும் அடிக்கடி நடக்கின்றன.
இந்தநிலையில் நேற்று ரயில்வே ஸ்டேஷன் கொடி மரம் முன் 55 வயது ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அதேநேரத்தில் கார் பார்க்கிங் அருகேயும் 50 வயது ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். வடக்கு போலீசார் இருவரின் உடலை மீட்டனர். உடல்களில் காயங்கள் இருக்கிறதா,இயற்கை மரணமா,கொலையா என போலீசார் ரயில்வே ஸ்டேஷன் பகுதியிலிருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
ரயில்வே ஸ்டேஷன் முன் பகுதியிலிருக்கும் நபர்களை சமூக நலத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் இதுபோன்ற நிலைக்கு காரணமாக உள்ளது. பொது இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு,ஆதரவற்று சுற்றித்திரிபவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.