/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டிப்பர் லாரி மோதி இருவர் காயம்..
/
டிப்பர் லாரி மோதி இருவர் காயம்..
ADDED : அக் 24, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: கோபால்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி 25. இவரது நண்பர் சதீஸ்குமார் 25. இருவரும் டூவீலரில் சேர்வீடு பிரிவு பகுதியில் சென்றபோது எதிரே திம்மணநல்லுார்-
பள்ளபட்டியை சேர்ந்த துரைச்சாமி ஓட்டி வந்த டிப்பர் லாரி டூவீலர் மீது மோதியது. டூவீலர் ஒட்டிய சதீஸ்குமார் உட்பட இருவரும் காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.