/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண், சிறுமியை ஏமாற்றிய இருவருக்கு சிறை
/
பெண், சிறுமியை ஏமாற்றிய இருவருக்கு சிறை
ADDED : டிச 31, 2024 05:01 AM
திண்டுக்கல்: வடமதுரை வேல்வார்கோட்டையை சேர்ந்தவர் ஞானபிரகாசம்34. இவர் 2017ல் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். வடமதுரை போலீசார் ஞானபிரகாசத்தை,கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.
குற்றவாளி,ஞானபிரகாசத்திற்கு,1 ஆண்டு சிறை,ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். குஜிலியம்பாறை அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி43. இவர் 2023ல் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்தார். வடமதுரை போலீசார் இவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளி,ரெங்கசாமிக்கு,20 ஆண்டுகள் சிறை,ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞராக ஜோதி ஆஜரானார்.