ADDED : மார் 12, 2026 05:26 AM

வடமதுரை: வடமதுரை வேல்வார்கோட்டை செட்டியபட்டியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் 42. திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் கமிஷன் மண்டி ஒன்றில் பணிபுரிந்தப்படி மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். சொந்த ஊர் வந்திருந்த நிலையில் அய்யலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பிரிவு பகுதியில் நேற்று மாலை 6:00 மணிக்கு டூவீலரில்(ஹெல்மெட் அணியவில்லை) சென்றபோது கார் மோதி இறந்தார். விபத்தில் காரில் சிக்கிய டூவீலர் 30 மீட்டர் துாரம் இழுத்து செல்லப்பட்டு தனியே விழுந்த நிலையில் பெட்ரோல் கசிவால் எரிந்து தீக்கிரையானது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
பாலசமுத்திரம்:: பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் ஆத்திமரத்தான் 35. டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) மார்ச் 8 இரவு வீட்டிற்கு சென்ற போது முன்னால் சென்ற டூவீலரில் மோதியதில் பலத்த காயம்: அடைந்தார். மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு நேற்று இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.:

