sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வேன் மீது லாரி மோதி இருவர் பலி

/

வேன் மீது லாரி மோதி இருவர் பலி

வேன் மீது லாரி மோதி இருவர் பலி

வேன் மீது லாரி மோதி இருவர் பலி


ADDED : ஜூலை 25, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே லாரி மோதியதில் வேன் ரோட்டில் கவிழ்ந்தது. இதில் தேனியைச் சேர்ந்த டிரைவர் உட்பட இருவர் பலியாயினர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள சின்ன ஓவுலாபுரத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் ரஞ்சித் 45. இவரது வேனில் அதே பகுதியை சேர்ந்த 22 பேர் ஆடி அமாவாசைக்காக ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள நாட்ராயன் கோயிலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அய்யர்மடம் அருகே வந்த போது ரோட்டோர கடையில் டீ குடிக்க திடீரென பிரேக் அடித்து வேனை திருப்பி உள்ளார்.

அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் வேன் ரோட்டில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் ரஞ்சித் 45, விவசாயி வாசகர் 70, இறந்தனர்.

வேனில் வந்த பாண்டி 50, பிச்சை 55, முருகானந்தம் 50, தவமணி 60, சிங்கம் 60, ராமராஜ் 70, அழகர் 70, பொம்மையன் 60, முருகன் 55, உள்ளிட்ட 16 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேடசந்துார் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், தீயணைப்பு அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் விபத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை துவரம்பள்ளத்தை சேர்ந்த சுரேஷ் 30, போலீசில் சரணடைந்தார்.






      Dinamalar
      Follow us