sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிராமப்புற ரோடுகளில் சீரற்ற வேகத்தடைகளால் பரிதவிப்பு! வாகனத்தில் எரிபொருள் வீண், பழுதாகும் அவலம்

/

கிராமப்புற ரோடுகளில் சீரற்ற வேகத்தடைகளால் பரிதவிப்பு! வாகனத்தில் எரிபொருள் வீண், பழுதாகும் அவலம்

கிராமப்புற ரோடுகளில் சீரற்ற வேகத்தடைகளால் பரிதவிப்பு! வாகனத்தில் எரிபொருள் வீண், பழுதாகும் அவலம்

கிராமப்புற ரோடுகளில் சீரற்ற வேகத்தடைகளால் பரிதவிப்பு! வாகனத்தில் எரிபொருள் வீண், பழுதாகும் அவலம்


ADDED : அக் 08, 2025 06:36 AM

Google News

ADDED : அக் 08, 2025 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை; திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புற ரோடுகளில் முறையற்ற வகையில் அமைக்கப்படும் வேகத்தடைகளால் சிறிய ரக வாகனங்களில் பழுது ஏற்படுவதும் எரிபொருள் வீணாக்கப்படுவதுடன் விபத்துக்களும் நடந்து உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

நகரங்கள், கிராமங்களை இணைக்கும் வகையில் இருக்கும் ரோடுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலை, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் சார்பில் தனித்தனியே அமைக்கப்பட்டு பராமரிக்கின்றன.

இவற்றில் குடியிருப்புகள், பள்ளிகள் இருக்கும் இடங்களில் வேகமான செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும்போதும் விபத்துக்களை தவிர்க்கும் நோக்கிலும் அதிகாரிகளால் வேகத்தடைகள் பரவலாக அமைக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலை அந்தஸ்து, நெடுஞ்சாலை பராமரிப்பு ரோடுகளை புதுப்பிக்கும் போது வேகத்தடை இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு உணர்த்தும் வகையில் வெள்ளை நிறத்தில் 'தெர்மோ பிளாஸ்ட் சிமென்ட் கோட்டிங்' முறையில் வெள்ளை வர்ணம் பூசப்படுகிறது. இங்கு மட்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் வர்ணம் பூசுகின்றனர். ஆனால் கிராமப்புற ரோடுகளில் இதுமாதிரி விபத்து தடுப்பு பணி செய்வதில்லை. அத்துடன் வேகத்தடைகளை இஷ்டத்திற்கு அதிக உயரமாகவும் அமைக்கின்றனர்.

இதனால் இப்பகுதியில் வழக்கமான வேகத்தில் செல்லும் டூவீலர்கள் வேகத்தடைகளை கடக்கும் போது தடுமாற விபத்துக்கள் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் என்றால் வேகத்தடை இருப்பது தெளிவாக தெரிவதில்லை. வேகத்தடை இருப்பதை உணர்த்தும் வகையில் ரோட்டோரம் எச்சரிக்கை பலகைகளும் பல இடங்களில் இல்லை. இதனால் டூவீலர்களில் செல்வோர் பலர் விழுந்து உயிர்களையும் இழந்துள்ளனர். அனைத்து ரோடுகளிலும் இருக்கும் வேகத்தடைகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் 'தெர்மோ பிளாஸ்ட் சிமென்ட் கோட்டிங் முறையில் வெள்ளை வர்ணம் பூசுவதுடன், உயர அளவுகளையும் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்துகளில் சிக்கும் நிலை

கிராமப்புற ரோடுகளில் பல இடங்களில் வேகத்தடைகளை அதிக உயரமாக அமைத்திருப்பதால் சிறிய ரக வாகனங்கள் செல்லும்போது அடிப்பாகத்தில் உராய்வு ஏற்பட்டு பழுதடைகின்றன. எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. டூவீலர்கள், சிறிய ரக கார்கள் வழக்கமான வேகத்தில் வேகத்தடையை கடக்கும் போது விபத்துகளில் சிக்கும் நிலையும் உள்ளது. அதிக உயர வேகத்தடைகள் அமைப்பதை தடுக்கவும் ஆண்டிற்கு ஒருமுறை 'தெர்மோ பிளாஸ்ட் கோட்டிங்' முறையில் வெள்ளை நிறம் பூசி வேகத்தடை இருப்பதை தெளிவாக சுட்டிகாட்டி விபத்துக்களை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - டி.மோகன்ராஜ் முன்னாள் மாவட்ட செயலாளர் பா.ஜ., கூட்டுறவு பிரிவு அய்யலுார்.








      Dinamalar
      Follow us