sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பயன்பாட்டிற்கு வராத நடைபாதை; சிதிலமடைந்த பூங்கா சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 10வது வார்டு மக்கள்

/

பயன்பாட்டிற்கு வராத நடைபாதை; சிதிலமடைந்த பூங்கா சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 10வது வார்டு மக்கள்

பயன்பாட்டிற்கு வராத நடைபாதை; சிதிலமடைந்த பூங்கா சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 10வது வார்டு மக்கள்

பயன்பாட்டிற்கு வராத நடைபாதை; சிதிலமடைந்த பூங்கா சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 10வது வார்டு மக்கள்


ADDED : நவ 30, 2024 05:41 AM

Google News

ADDED : நவ 30, 2024 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்; பயன்பாட்டிற்கு வராத நடைபாதை, சிதிலமடைந்த பூங்கா, ரோடு ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல், ஆபத்தான கழிவுநீர் மூடி என ஒட்டன்சத்திரம் நகராட்சி 10வது வார்டில் பிரச்னைகள் பல இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.

தென்றல் நகர், திருவள்ளுவர் சாலை, மார்க்கெட் பைபாஸ் ரோடு, திண்டுக்கல் பழநி சாலை, சடையப்ப நாயக்கர்பேட்டை பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் மார்க்கெட் பைபாஸ் ரோட்டின் மேற்கு பகுதியில் மழை காலத்தில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

தற்போது வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு நீண்ட கால பிரச்னை தீர்க்கப்பட்டு உள்ளது. நகராட்சி குப்பை கிடங்கு பயன்பாட்டில் உள்ளதால் குப்பை தினந்தோறும் அள்ள வார்டுக்குள் குப்பை குவிவது இல்லை. வார்டு பகுதிக்குள் சின்னகுளத்திற்கு செல்லும் ஓடையின் இரு பக்கங்களிலும் இருந்த செடிகள், சிறு மரங்கள் அகற்றப்பட்டு ஓடையை துார்வாரி சிமென்ட் தளத்துடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

சின்னக்குளம் கரையை சுற்றிலும் ரூ. பல கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் வீணாகிறது. நடைபாதை இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு பாதையின் மேல் புதர்கள் சூழந்து மறைத்துள்ளது.

இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரோட்டில் கடைகள் ஆக்கிரமிப்பு ,வாகனங்கள் வரைமுறையின்றி நிறுத்தப்படுவதால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்கள் தாராளமாக செல்லும் வகையில் ரோட்டை அகலப்படுத்த வேண்டும். மார்க்கெட் பைபாஸ் ரோடு, திருவள்ளுவர் சாலை சந்திப்பில் சாக்கடையை மூடியுள்ள இரும்பு மூடி வளைந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதே போல் இதையடுத்து உள்ள சாக்கடை மூடியும் சேதமடைந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

சீரமைக்கப்படாத ரோடு


சிவக்குமார், பா.ஜ., நகரத் தலைவர் : திருவள்ளுவர் சாலையில் மழைக்காலத்தில் கழிவு நீர் தேங்காமல் இருக்கும் வகையில் சாக்கடையை அகலப்படுத்த வேண்டும். திருவள்ளுவர் சாலையிலிருந்து மார்க்கெட் செல்லும் இணைப்பு ரோடை சீரமைக்க வேண்டும். சின்ன குளம் தெற்கு பகுதியில் இறைச்சிக் கழிவுகளுடன் குப்பை கொட்டப்படுவதால் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

வாகனங்கள் செல்வதில் சிரமம்


சேகர், ஹிந்து வியாபாரிகள் நலச் சங்க அமைப்புச் செயலாளர்:திருவள்ளுவர் சாலை மார்க்கெட் பைபாஸ் ரோடு இணையும் பகுதியில் போடப்பட்டுள்ள சாக்கடை மூடி ஆபத்தான நிலையில் உள்ளது. மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுபாலங்களுடன் ரோடு இணையும் பகுதியில் பாலம் உயரமாகவும், ரோடு தாழ்வாகவும் உள்ளதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது. காமாட்சி அம்மன் கோயில் எதிரில் இருந்து தென்றல் நகர் வழியாக செல்லும் ரோடு பல இடங்களில் சேதமடைந்து பள்ளங்களாக மாறி உள்ளது.

நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு


ஆ.அம்ச நிவேதா, கவுன்சிலர் (தி.மு.க.,): மார்க்கெட் பைபாஸ் ரோட்டின் மேற்கு பகுதியில் மழைநீர் தேங்காமல் செல்ல வடிகால் அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.

இதன் பயனாக இப்பகுதியில் வடிகால்கள் அமைக்கப் பட்டு நீண்ட கால பிரச்னை தீர்க்கப்பட்டு உள்ளது.ரூ.ஒரு கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. காவிரி குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட ரோடுகள் அனைத்திற்கும் புதிய ரோடுகள் ,குறுகலான சந்துகளில் பேவர் பிளாக் அமைக்கப்படும். தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தெருக்களில் எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us