sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழனியில் வைகாசி விசாக திருவிழா திருக்கல்யாணம்

/

பழனியில் வைகாசி விசாக திருவிழா திருக்கல்யாணம்

பழனியில் வைகாசி விசாக திருவிழா திருக்கல்யாணம்

பழனியில் வைகாசி விசாக திருவிழா திருக்கல்யாணம்


ADDED : ஜூன் 09, 2025 05:34 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழனி,: பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவையடுத்து பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி கிழக்கு ரதவீதி பெரியநாயகி அம்மன் கோவிலில் வசந்த உற்சவமான வைகாசி விசாக விழா ஜூன் 3ல் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. நேற்று மாலை, கோவில் முன் மண்டபத்தில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி எழுந்தருள சிறப்பு ஹோமம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

விடுமுறை நாளான நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முகூர்த்த நாள் என்பதால் திருஆவினன்குடியில் 75 திருமணங்களுக்கு மேல் நடந்தது. புது தாராபுரம் ரோடு முதல் குளத்து ரோடு வரை நேற்று காலை ஏற்பட்ட நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.






      Dinamalar
      Follow us