ADDED : அக் 19, 2025 10:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலூர் வேங்கனூர் பகுதியில் ரோட்டோரம் தப்புசாமி கடை அருகில் இருக்கும் மின்கம்பம் மூலம் அப்பகுதி வீடுகளுக்கு மின் விநியோகம் நடக்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 12:00 மணியளவில் கோயம்புத்தூரில் இருந்து தீபாவளிக்காக வையம்பட்டி திரும்பிய சரக்கு வேன் இந்த மின்கம்பத்தில் மோதியது. அருகில் இருந்த கடைக்குள்ளும் புகுந்தது. கடை சேதமானதுடன் மின்கம்பம் முறிந்து விழுந்தது. மின்ஒயர்கள் துண்டிக்கப்பட்டு நேற்று மாலை வரை சீரமைப்பு நடக்காததால் அப்பகுதி மக்கள் மின்சப்ளையை இழந்து தவித்தனர்.