/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வணங்காமுடி ஆர்த்தோ சென்டர் திறப்பு விழா
/
வணங்காமுடி ஆர்த்தோ சென்டர் திறப்பு விழா
ADDED : மார் 10, 2026 05:55 AM

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு, உசிலம்பட்டி ரோடு சாய்வேல் நகரில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீவணங்காமுடி ஆர்த்தோ சென்டர் திறப்பு விழா நடந்தது.
டாக்டர் வணங்காமுடி தலைமை வகித்தார். காளியப்பன் வரவேற்றார். தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் மருத்துவமனையை திறந்து வைத்தார்.
எக்ஸ்ரே அறையை கிழக்கு ஒன்றிய செயலாளர் கனகதுரை, உள்நோயாளிகள் வார்டுகளை மாவட்ட பிரதிநிதி ரெக்ஸ், பிசியோதெரபி அறையை பேரூராட்சி தலைவர் சிதம்பரம், ஆப்பரேசன் தியேட்டரை டாக்டர் முருகேச பாண்டியன் திறந்து வைத்தனர்.
டி.எம்.எஸ். மருத்துவமனை டாக்டர் சதீஷ்குமார், ஐவரி பல் மருத்துவமனை டாக்டர் குருநாதன், ஸ்ரீவெங்கடேஸ்வரா தண்டுவட மறுவாழ்வு மைய டாக்டர் ஷ்யாம் சுந்தர், குருவம்மாள் ரைஸ் மில் உரிமையாளர் பாண்டியராஜ், பட்டிமன்ற பேச்சாளர் சுபமாரிமுத்து, ஈடன் கார்டன் குழும தலைவர் கென்னடி, வத்தலக்குண்டு வெற்றிலை நகர் லயன் சங்க கவர்னர் திருமணி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

