sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விவசாயியிடம் ரூ. 2500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

/

விவசாயியிடம் ரூ. 2500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

விவசாயியிடம் ரூ. 2500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

விவசாயியிடம் ரூ. 2500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது


ADDED : ஏப் 30, 2025 07:05 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி : பட்டா பெயர் மாறுதலுக்காக விவசாயியிடம் ரூ. 2500 லஞ்சம் வாங்கிய திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்துார் வி.ஏ.ஓ., முகமது ஜக்காரியா 45 ,கைது செய்யப்பட்டார்.

சாணார்பட்டி அருகே பண்ணைபட்டியை சேர்ந்த விவசாயி மகேஸ்வரன் 29. இவர் தனது நிலத்திற்கு பட்டா பெயர் மாறுதல் செய்ய சிலுவத்துார் வி.ஏ.ஓ., முகமது ஜக்காரியாவை தொடர்பு கொண்டார். அதற்கு அவர் ரூ.2500 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மகேஸ்வரன் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

டி.எஸ்.பி., நாகராஜ் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய 2500 ரூபாய் நோட்டுகளை மகேஸ்வரன், நேற்று வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வைத்து முகமது ஜக்காரியாவிடம் கொடுத்துள்ளார். அப்பணத்தை வாங்கிய வி.ஏ.ஓ.,வை அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us