sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அமைப்பு தலைவரை தாக்க வி.சி.க., முயற்சி: பார்வேர்ட் பிளாக் மறியல்

/

அமைப்பு தலைவரை தாக்க வி.சி.க., முயற்சி: பார்வேர்ட் பிளாக் மறியல்

அமைப்பு தலைவரை தாக்க வி.சி.க., முயற்சி: பார்வேர்ட் பிளாக் மறியல்

அமைப்பு தலைவரை தாக்க வி.சி.க., முயற்சி: பார்வேர்ட் பிளாக் மறியல்


ADDED : மே 27, 2025 01:23 AM

Google News

ADDED : மே 27, 2025 01:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் தென்னிந்திய பார்வார்டு பிளாக் கட்சி கொள்கை விளக்க பொதுக் கூட்டத்திற்கு வந்த புரட்சி தமிழக பறையர் பேரவை அமைப்பு தலைவர் மூத்தியை தாக்க வி.சி.க., முயன்ற நிலையில் , கூட்டத்திற்கு செல்ல மூர்த்திக்கு அனுமதி மறுத்த போலீசாரை கண்டித்து பார்வேர்ட் பிளாக் கட்சியினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

வத்தலக்குண்டில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த புரட்சி தமிழக பறையர் பேரவை அமைப்பு தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி தனியார் விடுதியில் தங்கி இருந்தார். இவர் பெரம்பலூரில் நடந்த கூட்டத்தில் வி.சி.க., தலைவர் தொல் திருமாவளவன் குறித்து பேசியதில் பிரச்னை ஏற்பட்டது.

இதனால் வி.சி.க.,வினர் மூர்த்தி பேசுவதை தடுக்க பெத்தானியாபுரம் பகுதியில் வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். நிலக்கோட்டை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார் தனியார் விடுதி முன்பு குவிக்கப்பட்டனர்.

இதையறிந்த தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மூர்த்தியை மேடைக்கு வர அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். போலீசார் கூட்டம் துவங்கிய பின் அழைத்து வருவதாக கூறியதால் கலைந்து சென்றனர்.

ஆனால் கூட்டம் முடியும் வரை மூர்த்தியை மேடைக்கு செல்ல அனுமதிக்க வில்லை. மூர்த்தி கூறுகையில், '' என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.என்னை அறையில் வைத்து வெளியே செல்ல விடாமல் போலீசார் காவலுக்கு இருக்கின்றனர். தமிழகத்தில் பேச்சுரிமை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதற்கு இதுவே சாட்சி என்றார்.






      Dinamalar
      Follow us