ADDED : மே 08, 2025 03:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: சிவகாசியில் இருந்து பள்ளி பாடப் புத்தகங்களை ஏற்றிக்கொண்டு பாலக்காட்டிற்கு சரக்கு வாகனம் சென்றது.
குன்னுாரை சேர்ந்த குமார் ஓட்டினார். செம்பட்டி மூலச்சத்திரம் ரோட்டில் வண்ணாப்பட்டி அருகே சென்றபோது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் திடீரென பிரேக் போட்டதில் ரோட்டோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. டிரைவர் குமாருக்கு காயம் ஏற்பட்டது. ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.