/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடு பள்ளத்தால் தடுமாறும் வாகனங்கள்
/
ரோடு பள்ளத்தால் தடுமாறும் வாகனங்கள்
ADDED : ஜூன் 13, 2025 03:01 AM

குடிநீரின்றி அவதி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சில நேரங்களில் தண்ணீர் இன்றி உள்ளது. இதனால் மக்கள் குடிநீருக்காக அலைகின்றனர். எப்போதும் தண்ணீர் இருக்க வழி காண வேண்டும்.முத்துக்குமார், திண்டுக்கல்.............-----------
சேதமான மின் பெட்டி
திண்டுக்கல் திருவள்ளுவர் சாலையில் மின்கம்பத்தில் மீட்டர் பெட்டி சேதமடைந்தது தாழ்வாக உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது .போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் மீட்டர் பெட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயலட்சுமி, திண்டுக்கல்.
............------------பள்ளத்தால் விபரீதம்
திண்டுக்கல் -பழநி ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது .இதை அறிய குச்சியை நட்டு வைத்துள்ளனர் .இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். சிந்து, திண்டுக்கல்.
.........------------பாலத்தில் விரிசல்
வடமதுரை செங்குறிச்சி ரோட்டில் வள்ளி கரடு பிரிவு அருகில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தாக உள்ளது. வாகனங்களில் செல்வோர் பதறுகின்றனர். இதனை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் முன் வர வேண்டும். -- பாண்டியன், வடமதுரை.
............------------
சேதமான ரோடு
பழநி - பழைய தாராபுரம் ரோடு மானுார் சுவாமி கோயில் அருகில் ரோடு சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது .இதனால் வாகன ஓட்டிகள் கிழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர் .இதை சரி செய்ய நடவடிக்கை வேண்டும். ரவி, பழநி.
...........------------சாக்கடையில் அடைப்பு
திண்டுக்கல் மொட்டணம்பட்டி ரோட்டில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருப்பு பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதை கருதி சாக்கடையை சரி செய்ய வேண்டும். முத்துவேல், திண்டுக்கல்.
.........-------------
அள்ளப்படாத குப்பை
திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் குப்பை குவிந்துள்ளது .இதை பல நாட்களாக அள்ளாமல் உள்ளனர். .பிளாஸ்டிக் கலந்த குப்பையால் சுற்றுசூழலும் பாதிக்கிறது .சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இதை உடனுக்குடன் அகற்ற வேண்டும். முருகன், திண்டுக்கல்.
.............