sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் கொடைக்கானல் 16 வது வார்டில் தொடரும் அவலம்

/

போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் கொடைக்கானல் 16 வது வார்டில் தொடரும் அவலம்

போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் கொடைக்கானல் 16 வது வார்டில் தொடரும் அவலம்

போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் கொடைக்கானல் 16 வது வார்டில் தொடரும் அவலம்


ADDED : செப் 12, 2025 04:33 AM

Google News

ADDED : செப் 12, 2025 04:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: காமராஜர் சாலை, லாஸ்காட் ரோடு, டர்னர்புரம், பிரெஞ்ச் லேண்ட் பகுதிகளை உள்ளடக்கிய கொடைக்கானல் நகராட்சி 16 வது வார்டில் திருஇருதயாண்டவர் சர்ச், சின்ன மாரியம்மன் கோயில், ஆர்.டி.ஒ., அலுவலகம் உள்ளது. தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் வெளியே நடமாட அஞ்சுகின்றனர். தெருக்களில் ஆக்கிரமிப்பால் மக்கள் அவதிப்படுகின்றனர். பட்டா இல்லாத நிலையில் அரசு சலுகைகளை பெற முடியாது குடியிருப்போர் தவிக்கின்றனர். ரோட்டில் உலா வரும் கால்நடைகள், எரியாத தெருவிளக்குகள் என ஏராளமான பிரச்னைகள் உள்ளன.

தேவை சிசிடிவி கேமரா சுரேந்தர், பொறியாளர்: தெருக்களில் உள்ள குறுக்கு சந்துகள் ஆக்கிரமிக்கப்பட்டு மக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. காமராஜர் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் காலை, மாலை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்த ரோட்டில் குடிமகன், போதை வஸ்து பயன்படுத்துவோரால் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. சாக்கடைகளுக்கு மேல் மூடி அமைக்க வேண்டும். வார்டில் குறை குறித்து புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை. ரேஷன் கடையில் கட்டுப்பாடற்ற பொருட்கள் சரிவர சப்ளை செய்வதில்லை. சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்.

சீரமைக்கப்படாத பாதைகள் எபினேசர், முன்னாள் கவுன்சிலர் : லாஸ்காட் ரோடு பகுதியில் எல்வித வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை. அரசு மேல்நிலைப்பள்ளி அருகே காலை, மாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள் அவதிபடுகின்றனர். ரோட்டில் உலாவும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்படுகிறது. வார்டில் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.தெருவிளக்குகள் எரியாத நிலையில் தடுமாறும் நிலை உள்ளது. சமீபமாக குடிநீர் சப்ளை சரிவர சப்ளை ஆவதில்லை. தெருக்களில் உள்ள பாதைகள் சீரமைக்காமல் உள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை நஜீமாபானு, கவுன்சிலர், (ம.தி.மு.க.,): வார்டில் ரூ.5 கோடிக்கு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. தெரு நாய், கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டு வரி வழங்கப்பட்டு பட்டா கிடைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

வார்டில் உள்ள சாக்கடைகளுக்கு மூடி அமைக்கப்படும்.ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறுக்கு சந்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி வார்டில் சிசிடிவி கேமரா, வளர்ச்சிப் பணிகளை ஏற்படுத்தப்படும்.






      Dinamalar
      Follow us