/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
9 ஆண்டுக்குப் பின் வேலம்பட்டி பகவதி அம்மன் கோயில் திருவிழா
/
9 ஆண்டுக்குப் பின் வேலம்பட்டி பகவதி அம்மன் கோயில் திருவிழா
9 ஆண்டுக்குப் பின் வேலம்பட்டி பகவதி அம்மன் கோயில் திருவிழா
9 ஆண்டுக்குப் பின் வேலம்பட்டி பகவதி அம்மன் கோயில் திருவிழா
ADDED : ஏப் 15, 2025 07:27 AM

நத்தம்: நத்தம் அருகே வேலம்பட்டி பகவதி அம்மன் கோவிலில் பள்ளி சகுனம் கொடுத்ததால் 9 ஆண்டுகளுக்குப் பின் நடந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏப்.4ம் தேதி நத்தம் அரண்மனை சந்தன கருப்புசாமி, வேலம்பட்டி பகவதி அம்மன் கோயில்களில் பள்ளி சகுனம் கொடுத்ததால் 9 ஆண்டுகளுக்குப் பின் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து ஏப்.6 கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜை நடந்தது.
நேற்று கடம்பங்குளத்தில் அம்மன் கரகம் ஜோடிக்கப்பட்டு கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது.
தொடர்ந்து தீச்சட்டி, மாவிளக்கு, பால்குடம், கிடாய் வெட்டி பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
இன்று அதிகாலை முளைப்பாரி மற்றும் மஞ்சள் நீராட்டத்துடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.