/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாணார்பட்டியில் அரசு பஸ்சை சிறை பிடித்த கிராம மக்கள்
/
சாணார்பட்டியில் அரசு பஸ்சை சிறை பிடித்த கிராம மக்கள்
சாணார்பட்டியில் அரசு பஸ்சை சிறை பிடித்த கிராம மக்கள்
சாணார்பட்டியில் அரசு பஸ்சை சிறை பிடித்த கிராம மக்கள்
ADDED : செப் 17, 2025 07:44 AM
சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டியில் மாணவர்களுக்காக கால தாமதமாக வந்த அரசு பஸ்சை கிராமத்தினர் சிறைபிடித்தனர் .
சாணார்பட்டி வழியாக வீரசின்னம்பட்டிக்கு காலை நேரத்தில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் தினமும் சென்று வருகின்றனர். 2 வாரமாக காலை 8:15 மணிக்கு வரக்கூடிய பஸ் 9:00 மணிக்கு வந்தது. இதையடுத்து செப்.11ல் அரசு பஸ்சை கிராமமக்கள் சிறைபிடித்தனர். போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனாலும் சரியான நேரத்திற்கு வரவில்லை . ஆத்திரமடைந்த மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்தனர். போலீசார் , போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.