ADDED : நவ 16, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: வ.உ.சிதம்பரனார் நினைவுதினம் நவ.18ல் கடைபிடிக்கப்படுகிறது. அவரின் நினைவுதினத்தையொட்டி, துாத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரின் நினைவு இல்லத்தில் நடைபெறும் குருபூஜை விழாவிற்கு கொண்டு செல்வதற்கான ஆத்ம ஜோதி ஊர்வலம் திண்டுக்கல்லில் நேற்று துவங்கியது.
திருச்சி ரோட்டில் உள்ள வ.உ.சிதம்பரனார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, அமைச்சர் பெரியசாமி ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

