ADDED : ஜூலை 04, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி:காந்திகிராம பல்கலையில் தமிழ் துறையின் தமிழ்நாடு வ.உ.சி., ஆய்வு வட்ட சார்பில் விடுதலைப் போராட்ட வீரர்கள் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா நினைவு அறக்கட்டளை துவக்க விழா நடந்தது.
துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார்.பல்கலை பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன், அறக்கட்டளைக்கான நிதியாக 3 லட்சம்ரூபாயை பெற்றுக் கொண்டார். வ.உ.சி., ஆய்வு வட்ட தமிழ்நாடு அமைப்பின் தலைவர் ரங்கையா முருகன், செயலாளர் அறிவழகன் துவக்கி வைத்தனர்.
பேராசிரியர்கள் ஆனந்தகுமார், ஹாஜி மொகல் சலீம் பைக், மீனாட்சி, பூண்டி விஜயராமலிங்கம், வரலாற்று ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன் பங்கேற்றனர்.