ADDED : டிச 31, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வலைச்சேரிபட்டியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சரவணன். இவர் நத்தம் பஸ் ஸ்டாண்ட்,மார்க்கெட் பகுதி உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில் புத்தாண்டில் மதுவுக்கு இளைஞர்கள் அடிமை ஆக கூடாது, சுற்றுப்புறத்தை துாய்மையாக வைக்க வேண்டும்.
ஓட்டுக்கு பணம், பொருள் வாங்க வேண்டாம். எதிர்கால 5 ஆண்டுகளை கணக்கில் கொண்டு நல்லவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உடலில் கட்டிக் கொண்டு நத்தம் நகரில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.