sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கொடை உணவகத்தில் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

/

கொடை உணவகத்தில் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

கொடை உணவகத்தில் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

கொடை உணவகத்தில் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்


ADDED : நவ 13, 2024 11:00 PM

Google News

ADDED : நவ 13, 2024 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் ; கேரள மாநிலம் குருவாயூர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், 196 பேர் சுற்றுலாவிற்காக நேற்று முன்தினம் கொடைக்கானல் வந்தனர். இங்கு ஏரி சந்திப்பு பகுதி தனியார் விடுதியில் தங்கிய இவர்கள், இரவில் அசைவ உணவு சாப்பிட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து நேற்று அதிகாலை, 82 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

உடனடியாக அவர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பொது சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மாணவர்களிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.

வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த கிருஷ்ணன் கூறுகையில்,''உடல்நலக் குறைவுக்கு மாணவர்களுக்கு உணவில் ஏதேனும் பிரச்னையா, அதை கையாளும் முறையில் பிரச்னையா என கண்டறிய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

உணவு பாதுகாப்பு அலுவலர் லாரன்ஸ் கூறுகையில்,''தனியார் விடுதி உணவகத்தில் உள்ள மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அறிக்கை வரும் வரை சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு உணவு தயாரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us