sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 குழாய்கள் உடைப்பால் ரோட்டில் ஓடும் குடிநீர்

/

 குழாய்கள் உடைப்பால் ரோட்டில் ஓடும் குடிநீர்

 குழாய்கள் உடைப்பால் ரோட்டில் ஓடும் குடிநீர்

 குழாய்கள் உடைப்பால் ரோட்டில் ஓடும் குடிநீர்


ADDED : நவ 19, 2025 05:59 AM

Google News

ADDED : நவ 19, 2025 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதிக எடைகளால் விபத்து

திண்டுக்கல்லில் வாகனத்தில் அதிக அளவில் மூடைகளை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது .தொங்கியபடியே செல்வதால் பின்வரும் வாகனங்களில் பயணிப்போர் அச்சத்துடன் செல்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகானந்தம், திண்டுக்கல்............---------- ரோட்டில் ஓடும் குடிநீர்

பழநி காந்தி மார்க்கெட் அருகே ரோட்டில் குடிநீர் குழாய் உடைத்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் .இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாலதி பழநி.

...........----------கால்நடைகளால் இடையூறு

பழநி -திண்டுக்கல் ரோடு காலேஜ் பஸ் ஸ்டாப் அருகே சுற்றி திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. வாகனங்களில் செல்வோர் ,ரோட்டில் பஸ்களுக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமப்படுகின்றனர்.செந்தில்குமார், பழநி.

.............---------- நிழற்குடை அருகே குப்பை

திண்டுக்கல் அருகே என்.எஸ்.நகர் பயணிகள் நிழற்குடை அருகே குப்பையை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பை சிதறி கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது . குப்பையை அகற்ற வேண்டும்.வசந்தி, என்.எஸ்.நகர்.

.........----------கழிவுநீருடன் மழை நீர் தேக்கம்

மேலக்கோவில்பட்டி அம்பேத்கர் நகரில் சாக்கடை இல்லாததால் மழை பெய்யும் போது கழிவுநீருடன் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் சாக்கடை கட்டித்தர வேண்டும். தங்கபாண்டி, மேலக்கோவில்பட்டி.

........---------நாய்களால் அச்சம்

திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சி விக்னேஷ் நகரில் சுற்றி தெரியும் நாய்களால் பாதசாரிகள் ,வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர் .குடியிருப்பு பகுதிக்கு செல்வோரும் பயத்துடன் உள்ளனர். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கார்த்திகேயன், சீலப்பாடி.

............--------

ரோடை சீரமையுங்க

திண்டுக்கல் நாகல் நகர் ரயில்வே மேம்பாலத்தில் பல இடங்கள் குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். விபத்துக்கள் நடப்பதால் மேம்பால ரோட்டை சீரமைக்க வேண்டும் எம்.ஆர். ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.

.........--------






      Dinamalar
      Follow us