ADDED : டிச 02, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : கோவையிலிருந்து மதுரை செல்லும் வழியில் ஒட்டன்சத்திரம் வந்த கவர்னர் ரவியை கலெக்டர் பூங்கொடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
எஸ்.பி., பிரதீப், தாசில்தார் பழனிசாமி, நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, டி.எஸ்.பி., கார்த்திகேயன் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
ஒட்டன்சத்திரம் பயணியர் மாளிகையில் அரை மணி நேரம் ஓய்வு எடுத்து மதுரைக்கு புறப்பட்டு சென்றார். கவர்னரின் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.