/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஏன் இந்த அலட்சியம்: அரசு அலுவலகம், பொது இடங்களில் இல்லை சுகாதாரம்
/
ஏன் இந்த அலட்சியம்: அரசு அலுவலகம், பொது இடங்களில் இல்லை சுகாதாரம்
ஏன் இந்த அலட்சியம்: அரசு அலுவலகம், பொது இடங்களில் இல்லை சுகாதாரம்
ஏன் இந்த அலட்சியம்: அரசு அலுவலகம், பொது இடங்களில் இல்லை சுகாதாரம்
ADDED : டிச 12, 2024 06:08 AM

அரசுத்துறை அலுவலகங்களான தாலுகா, பத்திரப்பதிவு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு, சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள் மட்டுமின்றி தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வர். இவற்றில் பெரும்பாலான இடங்களில் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருப்பதில்லை.
ரூ. பல லட்சம் செலவில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்ட இடங்களில் அவற்றை பராமரித்தலில் அலட்சியம் வழக்கமாகி விட்டது. பெரும்பாலான அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை வாடிக்கையாகிவிட்டது. இச்சூழலில் பாதுகாப்பான குடிநீர், இயற்கை உபாதைகளுக்கான சுகாதாரமான கழிப்பறை, இருக்கை வசதியுடன் காற்றோட்டமான காத்திருப்பு அறை போன்ற வசதிகள் கிடைப்பதில்லை. ஆண்கள், கைக்குழந்தைகளுடன் வரும் மகளிர், கர்ப்பிணிகள் முதியோர் என அனைத்து தரப்பினருக்கும் இதே நிலை தான்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராம சந்தைகள், பஸ் ஸ்டாண்ட்கள் போன்ற பொது இடங்களிலும், சுகாதாரமற்ற சூழலுக்கு குறைவு இல்லை. பஸ் ஸ்டாண்ட்களில் கழிப்பறை வசதிக்காக பயணிகள் அவதிக்குள்ளாகும் அவலம் தொடர்கிறது. சில இடங்களில் கழிப்பறையை பூட்டி வைத்துள்ளனர். மாற்றுத்திறனாளி கழிப்பறையும், பராமரிப்பு, தண்ணீர் வசதின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. கழிவுநீர் வெளியேற வழியின்றி கழிவுகள் தேங்கி துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகின்றன.
தொற்று பாதித்த நாய்களால் பலர் பாதிப்படைகின்றனர். பொதுமக்களுக்ன அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.