/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மலையடிவார விளைநிலங்களில் வனவிலங்குகள்; அச்சத்தில் விவசாயிகள்
/
மலையடிவார விளைநிலங்களில் வனவிலங்குகள்; அச்சத்தில் விவசாயிகள்
மலையடிவார விளைநிலங்களில் வனவிலங்குகள்; அச்சத்தில் விவசாயிகள்
மலையடிவார விளைநிலங்களில் வனவிலங்குகள்; அச்சத்தில் விவசாயிகள்
ADDED : நவ 10, 2024 05:00 AM
சின்னாளபட்டி : ஏ.வெள்ளோடு, வலையபட்டி மலையடிவார கிராமங்களில் வனவிலங்குகள் நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
சிறுமலை அடிவார கிராமங்களான ஏ.வெள்ளோடு, செட்டியபட்டி பகுதியில் சில ஆண்டுகளாக போதிய மழை இல்லை. வனப்பகுதியில் இருந்து மயில், காட்டுப்பன்றி, காட்டு மாடுகள் அடிவார கிராமங்களில் உலா வர துவங்கின. சமீபத்திய மழையால் சிறுமலை பகுதியில் பசும் புல் பரவலாக வளர்ச்சி அதிகரித்துள்ளது. இருப்பினும் வன உயிரினங்களுக்கு தேவையான தண்ணீர் ஆதாரங்கள், இப்பகுதியில் போதியளவு இல்லை.
தண்ணீர் தேவைக்காக மலையடிவார கிராமங்களான ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, கல்பட்டி, வலையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வன உயிரினங்களின் நடமாட்டம் சில நாட்களாக அதிகரித்துள்ளது.
இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சில ஆண்டுகளாக அடிவார பகுதியில் கிடைத்த பலவகை தீவனம், சாகுபடிக்காக தேக்கி வைத்த தண்ணீர் தொட்டிகள் போன்றவை வன விலங்குகள் பழக்கமான வழித்தடத்தில் அமைந்துள்ளன. மழையால் சிறுமலை பகுதியில் உணவு கிடைத்தபோதும், தண்ணீருக்காக அடிவார கிராமங்களுக்கு அதிகளவில் வர துவங்கி உள்ளன. விளைநில சாகுபடி மட்டுமின்றி கால்நடைகளுக்காக சேகரித்துள்ள தீவனங்களையும் முழுமையாக சேதப்படுத்துகின்றன என்றனர்.