ADDED : மார் 17, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வேலாயுதம்பாளையம் சின்னி போடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி 53.
இவரது மனைவி முத்துலட்சுமி 53. இருவரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். அதே பகுதி ஓட்டு வீட்டில் தங்கி நாற்காலியில் ஒயர் பின்னும் தொழில் செய்தனர். நேற்று காலை வீட்டின் அருகே புளிய மரக்கிளை முறிந்து விழுந்ததில் வீட்டின் மின்கம்பிகள் அறுந்தன. ஓடுகள் உடைந்து விழுந்ததில் முத்துலட்சுமி காயமடைந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

