ADDED : செப் 28, 2025 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி: ஆல்டா தோட்ட பகுதியில் வசிக்கும் விவசாயி மணி. இவரது மனைவி அமுதா 32. நேற்று அதிகாலை வீட்டின் அருகே உள்ள ஜேக்கப் தோட்டத்து சாலையில் நடந்து சென்றபோது கால் தவறி 50 அடி கிணற்றில் விழுந்தார்.
ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் வீரர்கள் அமுதாவை மீட்டனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.